சென்னை : மக்கள் சேவை ஆற்றுவதற்காக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இன்று (ஆக.31) கொடநாடு செல்கிறார்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் இருக்கும் பங்களாவுக்கு அடிக்கடி செல்வது ஜெயலலிதாவின் வழக்கம். அவர் ஒவ்வொரு முறை கொடநாடு செல்லும் போதும், ஜெயலலிதா ஓய்வெடுக்க கொடநாடு செல்வதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன.
கொடநாடு சென்றாலும் தான் மக்கள் சேவையையே ஆற்றுவதாகவும் ஓய்வெடுக்க செல்லவில்லை எனவும் பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் சேவை ஆற்ற ஜெயலலிதா இன்று (ஆக.31) மீண்டும் கொடநாடு செல்கிறார். சென்னையிலிருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு கோவை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு சென்றடைகிறார். கொடநாட்டில் தங்கி சட்டமன்ற தேர்தல் வியூகங்களை ஜெயலலிதா அமைப்பார் என கூறப்படுகிறது.
செப். 3ம் தேதி நடக்கவிருக்கும் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app




