maniyosai.com

You are here: Home செய்திகள் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

tn govtசென்னை: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (ஜூலை 2) வெளியிட்ட செய்தி குறிப்பு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் தமிழகத்தை சேர்ந்த சரவணன், ஆர்.பன்னீர்செல்வம், நாகலிங்கம் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததோடல்லாமல், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தன் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 5 லட்ச ரூபாய் என 15 லட்ச ரூபாயை கார்கில் படை வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் கருணாநிதி இன்று (ஜூலை 2) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

30 March 2012, 17.22 தலைப்புச் செய்திகள்
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தனது...மேலும்...
0 Comments , 57 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
05 January 2012, 20.56 செய்திகள்
கருணாநிதி குடும்பத்திற்கு நிவாரண நிதி : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: மின்சாரம் தாக்கில் பலியான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த...மேலும்...
0 Comments , 118 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits