உதகை: கொடநாடு சென்றுள்ள ஜெயலலிதா இன்று (செப்.2) கோத்தகிரியில் அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
அதன் பின் நிருபர்ளுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா கூறியதாவது:
கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என கூறியிருந்தேன். அந்த கூட்டணி யாருடன் என்பது போகப் போக தெரியும்.
மதுரையில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடத்தக் கூடாது என மிரட்டல் வந்துக் கொண்டே இருக்கிறது. அதனைக் கண்டு எனக்கு அச்சமில்லை. திட்டமி்ட்டபடி மதுரையில் பொதுகூட்டம் நடந்தே தீரும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
மதுரையில் பொது கூட்டம் நடத்தினால் குண்டு வைத்து கொல்வோம் என கடந்த வாரம், ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்தது நினைவிருக்கலாம்.
Want to write for Maniyosai?
Download our android app




