புதுதில்லி: தன் அனுமதி இல்லாமல் செருப்பு விளம்பரத்திற்கு தன் புகைப்படத்தை உபயோகித்த காலணி தயாரிப்பு நிறுவனம் மீது ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ஜூன் 21 தேதியிட்ட சம்பத் பிரதி தின் என்ற வங்காள மொழி நாளிதழில், அஜந்தா காலணி நிறுவனம் ஒரு முழு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது.
அதில், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அஜந்தா நிறுவனத்தின் ரப்பர் காலணிகளையே மம்தா பானர்ஜி பயன் படுத்துவதாக அதில் விளம்பரப் படுத்தப் பட்டிருந்தது.
இந்த விளம்பரம் மம்தா பானர்ஜியின் அனுமதியின்றி வெளியிடப் பட்டுள்ளதாக, அஜந்தா காலணி தயாரிப்பு நிறுவனம் மீது மம்தா பானர்ஜி சார்பில் ரயில்வே துறை, நாடாளுமன்ற தெரு காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
”ரயில்வே அமைச்சரின் அனுமதி இல்லாமல், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் விளம்பரம் செய்யப் பட்டுள்ளது. அதை பார்த்து ரயில்வெ அமைச்சர் மிகவும் வேதனை அடைந்தார்.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app




