சென்னை: ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க இலங்கை அதிபர் ராஜபச்சேவிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளதாக, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் .
இலங்கை தமிழர்கள் தொடர்பாக, மன்மோகன் சிங்குக்கு சில நாட்களுக்கு முன், தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப் பட்டிருப்பதாவது:
"இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக, இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் முகாம்களில் உள்ள 47 ஆயிரம் தமிழர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளார்.
ராஜபக்சேவிடம் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கவும், இலங்கையில் வாழும் சிறுபான்மையினர், குறிப்பாக, தமிழர்கள் கெளரவத்துடன் வாழவும் வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு கருணாநிதிக்கு எழுதியுள்ள, ஜூன் 10ம் தேதியிட்ட கடிதத்தில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





