கும்பகோணம்: பிரதமர் பதவி தேடி வந்தும் வேண்டாம் என நிராகரித்தவர் ஜி.கே.மூப்பனார் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மறைந்த ஜி.கே.மூப்பனாரின் முழு உருவ சிலையை திறந்து வைக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (ஜூலை 3) வந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
“1997ம் ஆண்டு தேவ கவுடா அரசு கவிழ்ந்த பின் ஜி.கே.மூப்பனாருக்கு பிரதமர் பதவி வழங்கப் படுவதாக இருந்தது. பிரதமர் பதவி தேடி வந்தும் அதனை நிராகரித்த மாமனிதர் மூப்பனார். ஜி.கே.மூப்பனார் கடைசி வரை மக்களோடு மக்களாக இருந்தார். அவர் எந்த பதவியையும் விரும்பியதில்லை.
பிரதமர் பதவி தேடி வந்தும் அதனை நிராகரித்தவர்கள் மூன்று பேர். அவர்கள் காமராஜர், மூப்பனார் மற்றும் சோனியா காந்தி ஆவார்கள். இத்தகைய தியாக உள்ளத்திற்கும் மனித பண்பிற்கும் நான் தலை வணங்குகிறேன்.
மூப்பனாரை 40 ஆண்டுகளாக நான் அறிவேன். காந்திய கொள்கைகளை கடைப்பிடித்த அதிசய அரசியல்வாதி மூப்பனார். அவர் வாழ்க்கைமுறை எளிமையாக இருந்தாலும் சிந்தனை வலிமையாக இருந்தது. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக செலவிட்டார்.” இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
Want to write for Maniyosai?
Download our android app





