maniyosai.com

You are here: Home செய்திகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மேலும் உயர்வு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மேலும் உயர்வு

E-mail Print
Share/Save/Bookmark

indian parliamentபுதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மேலும் அதிகரிக்கப் பட்டு ரூ.60,000 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படை சம்பளமாக ரூ.16,000 பெற்று வந்தனர். கூட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ரூ.80,000 ஆக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ரூ.50,000 ஆக உயர்த்த கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 

சம்பள விவகாரத்தில் முரண்டு பிடித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று (ஆக.22) மத்திய நிதியமைச்சர் சந்தித்து பேசினார்.அவர்களின் ஆதங்கத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என அப்போது பிரணாப் முகர்ஜி உறுதியளித்தார்.

இந்நிலையில், ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்த ஊதியத்தை, ரூ.60,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (ஆக.23) ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவுகளுக்கான தொகையில் ஐந்தாயிரம் ரூபாயும், தொகுதி மேம்பாட்டு நிதியில் ஐந்தாயிரம் ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கான மசோதா இந்த வாரமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

04 January 2012, 18.29 தலைப்புச் செய்திகள்
இடஒதுக்கீடு : மத்திய அரசு திடீர் முடிவு
புதுதில்லி: மத்திய அரசு பணிகளில் நிரப்பப் படாமல் இருக்கும்...மேலும்...
0 Comments , 126 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 152 Hits
28 February 2012, 18.39 செய்திகள்
மேல்சிகிச்சை : சோனியா வெளிநாட்டு பயணம்
புதுதில்லி: கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப் பட்டிருக்கும் சோனியா...மேலும்...
0 Comments , 82 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits