maniyosai.com

You are here: Home செய்திகள் சிதம்பரத்தின் காவி பயங்கரவாதம் பேச்சு: பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மோடி வலியுறுத்தல்

சிதம்பரத்தின் காவி பயங்கரவாதம் பேச்சு: பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மோடி வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

chidambaramஅகமதாபாத்: ‘காவி பயங்கரவாதம்’ என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்த கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி கூறியதாவது:

”பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எந்த அதிகாரமும் இல்லை. ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் வேறொருவர் கவனித்து வருகிறார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் இழுக்கை சேர்த்து வருகிறார். கோயில்களில் கூட காவி கொடி பறந்துக் கொண்டிருக்கும். கோயில்களை தீவிரவாத செயல்கள் நடக்கும் இடம் என கூற முடியுமா? சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சங்கராச்சாரியார், சுவாமி ராமதாஸ் என நாட்டுக்காக பல தியாகங்களை செய்தவர்கள் காவி உடைகளையே அணிந்தனர். அவர்களெல்லாம் தீவிரவாதிகளா? இந்தக் கேள்விக்கு காங்கிரஸார் பதிலளிக்க வேண்டும்.”

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 100 Hits
19 January 2012, 20.47 செய்திகள்
காங்கிரஸை தோற்கடித்தால்தான் நாடு உருப்படும் : நிதின் கத்காரி
மெகபூப்நகர்: காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடித்தால்தான் நாடு...மேலும்...
0 Comments , 87 Hits
23 March 2012, 18.20 செய்திகள்
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்க்கவில்லை: தடவியல் அறிக்கை
காந்திநகர்: அண்மையில் சர்ச்சைக்குள்ளான 2 குஜராத் சட்டமன்ற...மேலும்...
0 Comments , 101 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits