குழந்தைகள் பயப்படும் இடமாக பள்ளியை மாற்ற வேண்டாம்: ஆசிரியர்களுக்கு பிரதமர் அறிவுரை
புதுதில்லி: குழந்தைகள் பயப் படும் இடமாக பள்ளிக்கூடங்களை மாற்றக் கூடாது என ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை (நாளை) ஆசிரியர்கள் தினமாக நாடெங்கும் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை மத்திய அரசு வழங்குவது வழக்கம்.




