புதுதில்லி: இந்தியாவில் நாசவேலைகளை செய்து காஷ்மீரை பிரித்து விட நினைக்கும் பாக். தீவிரவாத அமைப்புகளின் கனவு நிறைவேறாது என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில், பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு இன்று (பிப்.7) இரண்டாவது நாளாக நடந்து வருகிறது. இதில் கலந்துக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
”லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகுதீன் போன்ற பாக்கிஸ்தானில் இருந்து செயல் படும் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்புகள், பாக். வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் கடந்த வியாழக் கிழமை ஒரு கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது.
இந்த அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படும் துர்சக்திகள் ஆகும். வன்முறை மூலம் இந்தியாவை மிரட்டி காஷ்மீரை பிரிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் கனவு என்றும் நிறைவேறாது. இந்த பயங்கர அமைப்புகளை இந்தியா வெற்றி கொள்ளும்.”
இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



