ரூர்கேலா: ஒரிஸா மாநிலம் ரூர்கேலா அருகே ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (பிப்.8) அதிகாலை நடந்துள்ளது
பாலுலாடா மற்றும் ஜரேகேலா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என ரூர்கேலா ரயில்நிலைய தலைமை அதிகாரி பாண்டா
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் உயிர் இழப்பு எதுவும் நேரவில்லை.
மாவோயிஸ்டுகளின் இந்த அட்டூழியத்தால் ஹவுரா - மும்பை தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



