கொல்கத்தா: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்தித்துப் பேசியதற்கு பின்னரே தேவைப்பட்டால் எதையும் கூறுவேன் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (செப்.27) கூறினார்.
தகவல் பெறும் சட்டத்தின் மூலமாக பெறப்பட்ட நிதியமைச்சகத்தின் குறிப்பு தொடர்பாக, நாளை பிரதமரையும், மற்ற மூத்த அமைச்சரவை சகாக்களையும் சந்தித்தபின்னர் தான் எதுவும் தேவைப்பட்டால் பேசுவேன். நியூயார்க்கிலும் தில்லியிலும் சொன்னதைத் தான் இப்பொழுதும் சொல்கிறேன்" என்று முகர்ஜி இன்று கொல்கத்தாவில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
"பிரதமர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். நிதி அமைச்சகத்தின் குறிப்பு குறித்து பிரதமரை சந்திக்காமல் எதுவுமே கூறமுடியாது. பிரதமர் இன்று (செப்.27) மாலை நாடு திரும்புகிறார். நானும் நாளை மாலை புதுதில்லி செல்கிறேன். எதையாவது நான் சொல்லியே ஆகவேண்டும் என்று இருந்தால் பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் சந்தித்தப் பிறகே என்னால் சொல்லமுடியும்." இவ்வாறு புதுதில்லியிலிருந்து கொல்கத்தா வந்தடைந்த முகர்ஜி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நினைத்திருந்தால் தொலைத்தொடர்புத் துறையிடம் ஏலமுறையை பின்பற்றுமாறு வலியுறுத்தி இருக்கலாம் என்று நிதி அமைச்சகம் மார்ச் 25 அன்று பிரதமருக்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தது. அந்த குறிப்பு வெளியாகி அது எழுப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து, 5 நாள் விஜயமாக நியூயார்க் சென்றிருந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி புதுதில்லி திரும்பினார்.
பிரணாப் முகர்ஜி நியூயார்க்கில் ஞாயிற்றுக் கிழமையன்று பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் நிதி அமைச்சகக் குறிப்பு தொடர்பாக வல்லுநர்களின் கருத்தை பெறபோவதாக கூறினார்.
"மதிப்பிற்குரிய அமைச்சர்", என்று பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரத்தைக் குறிப்பிட்டார் ஆனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்துப் பேசிய பிறகுதான், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சகக் குறிப்பைப் பற்றி வாயைத் திறக்க முடியும் என்று கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





