புதுடெல்லி: மகளிர் மசோதா நிறைவேற்றுவதுக் குறித்த ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நாளை (09/03/2010) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மகளிர் மசோதா மகளிர் தினமான இன்று தாக்கல் செய்யப்படும் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டது. முதலில் இதற்கான ஓட்டெடுப்பு மாலை 6 மணிக்கு நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஓட்டெடுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இதுக் குறித்த ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நாளை (09/03/2010) அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



