புதுதில்லி: மும்பை, கோல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களை தீவிரவாதிகள் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை, இந்தியன் முஜாஹுதீன் அமைப்பின் பயங்கரவாதி சல்மான் அகமத்திடம் நடத்தப் பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் அலட்சியப் படுத்த முடியாது.
அதனால், சம்மந்தப் பட்ட மாநிலங்களின் அரசுகளை நாங்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளோம்.” என்றார்.
| < Prev | Next > |
|---|









