ஐதரபாத்: தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வு துறைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதல்வராக இருந்த போது கர்நாடக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜனார்த்தன ரெட்டியின் ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு முறைகேடாக உரிமம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். தற்போது உயிருடன் இல்லாத நிலையில், இது குறித்து அவரது மனைவி விஜயாவிடமும், மகன் ஜெகன்மோகன் ரெட்டியிடமும், சிபிஐ அண்மையில் விசாரணை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்திற்கு தனது தந்தை ஆட்சிக் காலத்தில் உரிமம் வழங்கப் படவில்லையென்றும், 2002-ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது உரிமம் வழங்கப் பட்டதாகவும், ஒய்.எஸ்.விஜயாவும், ஜெகன்மோகன் ரெட்டியும் கடந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த மனு இன்று (நவ.14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் சொத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய புலனாய்வு துறைக்கு ஆணையிடப் பட்டது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




