ஐதரபாத்: மகளிர் இடஒதுக்கீடு கொண்டு வந்த சோனியா காந்திக்கு பாரதரத்னா விருது வழங்கப் பட வேண்டும் என ஆந்திர காங்கிரஸ் மகளிர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆந்திர காங்கிரஸின் மகளிர் அணி தலைவி கங்கா பவானி கூறுகையில்,
“சோனியா காந்திக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை, ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு, ஏற்கனவே ஃபேக்ஸ் மூலம் அனுப்பியுள்ளோம். அவரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம்.” என்றார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப் பட்டதால், காந்தி பவனில் (ஓட்டல் அல்ல! ஆந்திர மாநில காங். தலைமையகம்.) காங். தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



