maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் கைது

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் கைது

E-mail Print
Share/Save/Bookmark

rithishசென்னை: நில அபகரிப்பு வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் இன்று (நவ.16) கைது செய்யப் பட்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார்.

கடந்த மே மாதம் அதிமுக ஆட்சி அமைந்த பின், தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நில அபகரிப்பு செய்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப் பட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக நா.உ. ரித்தீஷ் இன்று (நவ.16) கைது செய்யப் பட்டார்.



திருபெரும்புதூரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலத்தை திமுக நா.உ. ரித்தீஷ் அபகரித்து தில்லியை சேர்ந்த நிறுவனத்திடம் விற்று விட்டதாக காஞ்சிப்புரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த காவல்துறையினர், சாமிக்கண்ணுவின் கையெழுத்தை ரித்தீஷ் போட்டு மோசடி செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இன்று (நவ.16) காலை மயிலாப்பூரில் ரித்தீஷ் கைது செய்யப் பட்டார். பின்னர், அவரை திருபெரும்பதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேர்நிறுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரித்தீஷை இந்த மாதம் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரித்தீஷ் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 16 November 2011 18:58 )  


More and More


கிட்டதட்ட

03 May 2012, 17.37 தலைப்புச் செய்திகள்
புதுக்கோட்டையில் போட்டி இல்லை : கருணாநிதி அறிவிப்பு
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப் போவதில்லை என...மேலும்...
0 Comments , 42 Hits
27 January 2012, 19.10 செய்திகள்
நில அபகரிப்பு : சசிகலா உறவினர் ராவணன் கைது
கோவை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப்...மேலும்...
0 Comments , 154 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 152 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits