புதுதில்லி: அஃபாகனிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் மீது அண்மையில் நடந்த தாக்குதல்களையடுத்து, அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் இந்தியா இருப்பதாக தெரிகிறது.
கடந்த பிப். 26ம் தேதி ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியர்கள் அடிக்கடி தங்கும் விடுதியில், தீவிரவாத தாக்குதல் நடத்தப் பட்டது.இதில் 7 இந்தியர்கள் பலி ஆயினர்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டுடனான உறவுகளை முறித்துக் கொள்ள இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
ஆஃப்கானிஸ்தானில், சாலை அமைக்கும் பணிகள், மின்சாரத் துறை என பல துறைகளில் பணி புரிந்து வரும் இந்தியர்களை உடனடியாக தாயகம் திரும்ப சொல்லும் யோசனையில் மத்திய அரசு இருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



