பாட்நா: பீகார் மாநிலம், சீதாமர்கி மாவட்டத்தில், மாநில அரசால் நடத்தப் படும் பள்ளியில், நேற்று (மார்ச் 10) சத்துணவு சாப்பிட்ட 2 மாணவிகள் பலி ஆகியுள்ளனர்.
சங்கீதா என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியும், நீலு என்ற ஒன்றாம் வகுப்பு மாணவியும், நேற்று (மார்ச் 10) பள்ளியில் சத்துணவு சாப்பிட்டுள்ளனர்.
மாலையில் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் போது சோர்வாக காணப் பட்ட அவர்கள், சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் ஹர்சிங்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்ச் 10 மாலை சேர்க்கப் பட்டனர். சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறக்க, நீலு இன்று (மார்ச் 11) காலை இறந்தார்.
விஷம் கலந்த சத்துணவை உண்டதால்தான் அவர்கள் இறந்ததாக, அவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பள்ளி மாணவிகளின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என சீதாமர்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



