maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் முல்லை பெரியாறு: மாநிலம் தழுவிய போராட்டம் - திமுக முடிவு

முல்லை பெரியாறு: மாநிலம் தழுவிய போராட்டம் - திமுக முடிவு

E-mail Print
Share/Save/Bookmark

kalaignarசென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 12ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அடம் பிடித்து வருகிறது. இதனை தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை (டிச.9) அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் கூடியது. கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் கேரள அரசைக் கண்டித்து டிசம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவெடுக்கப் பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட நினைக்காமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றும், தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 January 2012, 19.23 செய்திகள்
ஒப்பந்த படி தமிழகத்துக்கு தண்ணீர் : உம்மண் சாண்டி அறிவிப்பு
சென்னை: இரு மாநில ஒப்பந்தப் படி தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர்...மேலும்...
0 Comments , 127 Hits
06 January 2012, 20.58 செய்திகள்
புயல் நிவாரணம்: அதிமுக அரசுக்கு முழு ஒத்துழைப்பு - கருணாநிதி பேட்டி
சென்னை: தானே புயல் நிவாரண பணிகளில் அதிமுக தலைமையிலான தமிழக அரசுக்கு...மேலும்...
0 Comments , 143 Hits
22 March 2012, 21.17 செய்திகள்
தனி ஈழம் அமைவதே குறிக்கோள் : கருணாநிதி
சென்னை: தனி ஈழம் அமைவதே தன் குறிக்கோள் என திமுக தலைவர் கருணாநிதி...மேலும்...
0 Comments , 72 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits