கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாடு இன்று (ஜூன் 23) கோவையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழ் ஆர்வலருமான அப்துல் கலாம் பங்கேற்கவில்லை. அப்துல் கலாமுக்கு மாநாட்டு அழைப்பிதழ் முறையாக அனுப்பப் படவில்லை எனக் கூறப்படுகிறது.
சோனியா காந்திக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் போது அதை சட்ட சிக்கல்களை எடுத்துரைத்து தடுத்தவர் அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம்தான் என்ற பேச்சும் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.
எனினும், ஒரு உண்மையான தமிழர், தமிழ் மாநாட்டுக்கு அழைக்கப் படாமல் இருப்பது கேலிக் கூத்தாக இருப்பதாக பொது மக்கள் கருதுகின்றனர்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





