கோவை: கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 2 வது நாளான இன்று (ஜூன் 24) நடிகர் ராகவா லாரன்ஸின் மாற்றுத் திறனாளிகள் குழு நடன நிகழ்ச்சியை நடத்தியது. மாற்றுத் திறனுடையவர்கள் ஆடிய நடனம், பார்ப்பவர்கள் மனதை கவர்ந்தது.
இந்த நடன நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது:
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து இந்தக் குழந்தைகள் (மாற்றுத் திறனுடையோர்)மிகவும் சந்தோஷமாக உள்ளனர். தங்கள் மகிழ்ச்சியை நேற்று முதல் என்னிடம் தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.
சிலர் கேட்டாலும் தர மாட்டார்கள். நாங்கள் கேட்காமலேயே இந்த அரிய உதவியை செய்த முதல்வர் ஐயாவுக்கு எங்கள் குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






