சென்னை: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (ஜூலை 2) வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் தமிழகத்தை சேர்ந்த சரவணன், ஆர்.பன்னீர்செல்வம், நாகலிங்கம் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் கருணாநிதி மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததோடல்லாமல், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தன் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா 5 லட்ச ரூபாய் என 15 லட்ச ரூபாயை கார்கில் படை வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் கருணாநிதி இன்று (ஜூலை 2) உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






