புதுதில்லி: பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரையிலும், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டம் முன் கொண்டு வரும் வரையிலும் பாக்கிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:
“பாக்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் மனப் போக்கு, இந்தியாவுடன் அமைதியான உறவை பேண பாக்கிஸ்தான் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
26/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாக். கடற்படை பயிற்சி அளித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை, பாக். உளவுத்துறை தலைவர் அகமது ஷுஜா பாஷா, அண்மையில் சிறையில் சந்தித்துள்ளார். இந்நிலையில், பாக்கிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.”
இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் ரூடி கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






