அகமதாபாத்: ‘காவி பயங்கரவாதம்’ என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்த கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி கூறியதாவது:
”பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எந்த அதிகாரமும் இல்லை. ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் வேறொருவர் கவனித்து வருகிறார்.
ஒரு காலத்தில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் இழுக்கை சேர்த்து வருகிறார். கோயில்களில் கூட காவி கொடி பறந்துக் கொண்டிருக்கும். கோயில்களை தீவிரவாத செயல்கள் நடக்கும் இடம் என கூற முடியுமா? சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சங்கராச்சாரியார், சுவாமி ராமதாஸ் என நாட்டுக்காக பல தியாகங்களை செய்தவர்கள் காவி உடைகளையே அணிந்தனர். அவர்களெல்லாம் தீவிரவாதிகளா? இந்தக் கேள்விக்கு காங்கிரஸார் பதிலளிக்க வேண்டும்.”
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






