சென்னை: வாஜ்பாய் அரசு 13 நாட்களில் கவிழ தான் காரணம் அல்ல என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாஜ்பாய் அரசு அகாலமாக கவிழ ஜெயலலிதாவே காரணம் என முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா இன்று (செப்.3) அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளிலும், 13 மாதங்களிலும் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியதற்கு நான் காரணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக பதவி வகித்தது 1996ம் ஆண்டு. அப்போது, அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெறவில்லை. நிலைமை இவ்வாறிருக்க 13 நாளில் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்ததற்கு நான் எப்படி காரணமாக முடியும்?. தமிழ்நாட்டின் நலத்திற்கு எதிராக, குறிப்பாக காவிரியில் தமிழகத்திற்கு எதிரான நிலையை பாஜக 1999ம் ஆண்டு எடுத்ததன் காரணமாக, அதிமுக, பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






