சென்னை: இந்தியாவின் 63-வது குடியரசுதின கொண்டாட்டம் சென்னையில் இன்று (ஜன.26) காலை சிறப்பாக நடந்தேறியது. தமிழக ஆளுனர் கே.ரோசைய்யா மூவண்ணக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வீரதீர விருதுகளை வழங்கினார்.
முன்னதாக இன்று (ஜன-26) காலை தமிழக ஆளுனர் ரோசையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தமிழக காவல்துறையினரும், தீயணைப்புப் படையினரும் அவ்வமயம் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
அந்த கொடியேற்று விழா வைபவத்தில் தமிழக முதல்வர் வீரதீர செயல்களுக்கான விருதுகளை வழங்கினார். அண்மையில் சென்னையில் நடந்த தீவிபத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு தன்னுயிரை ஈந்த தீயணைப்பு வீரர் கே. அன்பழகனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. காலம்சென்ற அன்பழகனின் மகள் வீரச்செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் கையினால் பெற்றுக்கொண்டார்.
இந்திய ராணுவம், மர்றும் விமானப்படையினரின் ஊர்தி ஊர்வலமும், பள்ளி சிறுவர்களின் நாட்டிய நிகழ்ச்சிகளும் விழாவை சிறப்படையச் செய்தன.
சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை நடந்த குடியரசு தின விழாவில் பல முக்கிய பிரமுகர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


