maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் திமுக அரசைக் கண்டித்து 7ம் தேதி தென்சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

திமுக அரசைக் கண்டித்து 7ம் தேதி தென்சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaசென்னை: கடுமையான மின்வெட்டு, காலாவதி மருந்து விவகாரம் ஆகியவற்றை கண்டித்து ஜூன் 7ம் தேதி தென்சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (ஜூம் 5) ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை :


சென்னையில் அனைத்துப்பகுதிகளிலும் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. சில சமயங்களில் இரவு நேரங்களிலும் இந்த மின் வெட்டு தொடர்கிறது.

தமிழ்நாடே இருளில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், மக்களின் உயிருடன் விளையாடும் போலி மற்றும் காலாவதி மருந்துப் பொருட்கள் விற்பனை, காலாவதி மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றைக் கண்டு மக்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.

நல்ல, தரமான உணவுப்பொருட்களைக் கூட காசு கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத  சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, சென்னை நகரில் அறிவிக்கப்படாத மின் வெட்டை அமல்படுத்தியுள்ள மைனாரிட்டி திமுக அரசைக் கண்டித்தும், காலாவதி மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், போலி மற்றும் காலாவதி மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்தியும், மின்வெட்டை சரி செய்ய வலியுறுத்தியும், தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் 7-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 05 June 2010 15:23 )  


More and More


கிட்டதட்ட

25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
30 March 2012, 17.22 தலைப்புச் செய்திகள்
காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தனது...மேலும்...
0 Comments , 58 Hits
26 March 2012, 18.13 வணிக செய்திகள்
தமிழக பட்ஜெட் 2012 - 13 : முதன்மை அம்சங்கள்
சென்னை: 2012 - 13 நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை,...மேலும்...
0 Comments , 118 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits