ஐதரபாத்: முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்திற்கு, ஆந்திர உயர்நீதிமன்றம் தடை விதித்து இன்று (பிப்.8) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆந்திர பிரதேச பிறபடுத்தப் பட்டோர் கமிஷன் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், முஸ்லிம் மதத்தில் இருக்கும் 15 உட்பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, ஆந்திர அரசு, சட்டசபையில் 2007ம் ஆண்டு நிறைவேற்றியது.
அந்த மசோதா பின்னர் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப் பட்டு சட்டமாக்கப் பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் கொண்டாலா ராவ் என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதை அணில் ரமேஷ் தவே தலைமை வகிக்கும் 7 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இன்று (பிப்.8) விசாரித்தது. பின்னர், இந்த இடஒதுக்கீடுக்கு தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
இதனால் ஆந்திர அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





