லாஸ் ஏஞ்சல்ஸ்: இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு உலக அளவில் உயரிய விருதான அமெரிக்க கிராமி விருதுக் கிடைத்துள்ளது. இவ்விருது வழங்கும் விழாவில் பேசிய அவர் இறைவனுக்கும் இந்தியர்களுக்கும் நன்றித் தெரிவித்தார்.
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயரிய கிராமி விருதை அளித்து வருகிறது. அதில் இவ்வாண்டு ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஜெய் ஹோ’ பாடலுக்காகவும், அதேத் திரைப்படத்தின் ஒலியமைப்புக்காகவும் இரண்டு விருதுகள் அளித்துள்ளது.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில் இறைவன் அருளால்தான் இவ்விருதுக் கிடைத்திருக்கிறது. அவருக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியர்களின் அன்பும், ஆதரவும் அவர்களதுப் பிரார்த்தனையும் எனக்கு இருக்கிறது. அதனால் இந்த விருதுப் பெறும் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் என்றார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ’ஜெய் ஹோ’ பாடலுக்குத் தான் கடந்தாண்டு ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதுக் கிடைத்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





