புதுதில்லி: மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேள்விநேரத்தை ரத்து செய்து விட்டு, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என அக்கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் லால்காரில் நேற்று (ஆக.9) நடந்த பேரணியில் மத்திய ரயில்வே அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.
அதில், மாவோயிஸ்டு தலைவர் ஆசாத் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த நக்சல் ஆதரவு பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு மம்தா பானர்ஜியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி விவாதிக்க வேண்டும் என பாஜகவின் மாநிலங்களவை துணை தலைவர் அலுவாலியா நோட்டீஸ் அளித்திருந்தார்.
மாநிலங்களவை இன்று (ஆக.10) காலை கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு, மம்தா பானர்ஜியின் சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி விவாதிக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை தலைவர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார். ஆனால், இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து மதியம் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப் பட்டது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




