புதுதில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்தை 3 மடங்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது ரூ.16,000 அடிப்படை சம்பளமாக வழங்கப் படுகிறது. இது உயர் மட்ட அரசு அதிகாரிகளின் ஊதியத்தை விட குறைவாக இருப்பதால், ரூ.80,001 ஆக சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பரிந்துரை செய்திருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில் பல கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி,ரூ.16,000 ஆக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியம், ரூ.50,000 ஆக உயரும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவுகளுக்கான தொகை இருபது ஆயிரம் ரூபாயில் இருந்து நாற்பது ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





