கோவை: கோவையில் நடைபெற்று வரும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுக் கொள்ள கோவை சென்றிருந்த காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தலைவர் டி.சுதர்சனம் மாரடைப்பால் காலமானார்.
கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் சுதர்சனம். இவருக்கு திடீரென நேற்று (ஜூன் 25) மாரடைப்பு ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அவரை, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர். முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து மருத்துவர்கள் கோவைக்கு வரவழைக்கப் பட்டனர். சுதர்சனத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது.
இந்நிலையில், இன்று மாலை (ஜூன் 26) சிகிச்சை பலனின்றி சுதர்சனம் காலமானார். இதனைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சுதர்சனம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





