புதுடெல்லி: பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் குஜராத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதால் அவர் குஜராத் கலவரத்தையோ அல்லது ஆர் எஸ் எஸ்ஸையோ ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சமாஜ்வாதிக் கட்சியிலிருந்து வெளியேறிய அமர்சிங் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஐம்பதாம் ஆண்டு கோல்டன் ஜூபிலிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு(2010) மே 1ம் தேதி நடைப்பெற உள்ளது. இதன் விளம்பரத் தூதுவராக பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கும் சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதனால் அமிதாப் பச்சன் குஜராத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதால் அவர் குஜராத் கலவரத்தையோ அல்லது ஆர் எஸ் எஸ்ஸையோ ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சமாஜ்வாதிக் கட்சியிலிருந்து வெளியேறிய அமர்சிங் கூறியுள்ளார். குஜராத் சுற்றுலாவை மேன்படுத்த மட்டுமே அவர் விளம்பரத் தூதராக பொறுப்பேற்றுள்ளார். மற்றப்படி வேறெதெற்கும் இல்லை. உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி விரும்பினால் தாஜ் மகாலுக்காகக் கூட விளம்பரத் தூதராக அமிதாப் செயலாற்றுவார் என அமர்சிங் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


