maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் நாட்டை ஏமாற்றாதீர்கள் : பிரதமருக்கு அண்ணா ஹசாரே கடிதம்

நாட்டை ஏமாற்றாதீர்கள் : பிரதமருக்கு அண்ணா ஹசாரே கடிதம்

E-mail Print
Share/Save/Bookmark

anna hazareபுதுதில்லி : வலிமையற்ற லோக்பால் மசோதாவை தாக்கல் செய்து நாட்டை ஏமாற்ற வேண்டாம் என பிரதமருக்கு சமூக வேவகர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

அதே போன்ற தனிதனிக் கடிதங்கள் ராகுல் காந்தி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, உ.பி.,முதல்வர் மாயாவதி உள்ளிட்டோருக்கும் அண்ணா குழுவால் அனுப்பியுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணா ஹசாரே கூறியிருப்பதாவது:

' சோதா லோக்பால் மசோதாவை திரும்பப் பெற கொஞ்சமாவது துணிச்சல் காட்டுங்கள். அரசு தாக்கல் செய்திருக்கும் லோக்பால் மசோதா வலிமையானதா? எப்படி உங்களால் நாட்டை ஏமாற்ற முடிகிறது?

லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் சிபிஐயை கொண்டு வர மத்திய அரசு ஏன் தயங்குகிறது? அரசு பயப்படும் அளவு சிபிஐயிடம் ஏதாவது கோப்பு உள்ளதா? அல்லது ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற சிபிஐயை தவறாக பயன்படுத்தும் எண்ணம் உண்டா?

உங்களுக்கு 80 வயது ஆகி விட்டது. உங்களுக்கு மீண்டும் பிரதமர் ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் அளிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், வலிமையான லோக்பால் சட்டத்தை கொண்டு வந்தால் இந்தியா என்றென்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும்.

இந்த நாடு உங்களுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டது. இனி நீங்கள் நாட்டுக்கு சிறிதளவாவது திரும்ப செலுத்த வேண்டும். அதற்கு நீங்கள் வலிமையான லோக்பால் சட்டத்தை துணிச்சலுடன் கொண்டு வர வேண்டும்.'

இவ்வாறு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 161 Hits
06 January 2012, 19.20 செய்திகள்
ஆரூஷி கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுதில்லி: ஆரூஷி கொலை வழக்கில், அவளது பெற்றோர் ராஜேஷ் தல்வார்...மேலும்...
0 Comments , 137 Hits
08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits