maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் போபால் விஷ வாயு சம்பவம்: அமைச்சர் குழுவின் அறிக்கை திங்கள் கிழமை இறுதி செய்யப் படும்

போபால் விஷ வாயு சம்பவம்: அமைச்சர் குழுவின் அறிக்கை திங்கள் கிழமை இறுதி செய்யப் படும்

E-mail Print
Share/Save/Bookmark

bhopal gas tragedyபுதுதில்லி: போபால் விஷ வாயு சம்பவம் பற்றிய பிரதமர் அமைத்த அமைச்சர் குழுவின் அறிக்கை திங்கள் கிழமை இறுதி செய்யப் படும் என தெரிகிறது.

1984ம் ஆண்டு நடந்த போபால் விஷ வாயு கசிவு சம்பவம் 15000 பேரை பலிக் கொண்டது. இந்தியாவில் நடந்த மிகவும் கொடூரமான சம்பவத்தில் இதுவும் ஒன்று. இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பிறகு போபால் விஷ வாயு சம்பவத்தின் தீர்ப்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அண்மையில் வழங்கியது. உயிர் பலியின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை மிகவும் குறைவு என்ற கருத்து நாடு முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதால், போபால் விஷ வாயு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய நிவாரணம், மறுசீரமைப்பு பணிகள், நீதிமன்ற தீர்ப்புக்கு அடுத்து சட்ட ரீதியாக செய்ய வேண்டிய செயல்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து 10 நாட்களுக்குள் அறிக்கை பெற, மத்திய அமைச்சர் குழு ஒன்றை பிரதமர் உருவாக்கினார். இதன் தலைவராக மத்திய அமைச்சர் சிதம்பரம் நியமிக்கப் பட்டார்.

பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த அமைச்சர் குழுவின் கூட்டம் இன்று மதியம் (ஜூன் 18) நடந்தது. இந்த அமைச்சர் குழுவின் இறுதி அறிக்கை வரும் திங்கள் கிழமைக்குள் இறுதி செய்யப் படும் என தெரிகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 125 Hits
19 January 2012, 21.04 செய்திகள்
மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப் பாஜக அரசு பயன்படுத்தவில்லை - சோனியா குற்றச்சாட்டு
கபுர்தளா (பஞ்சாப்) : மத்திய அரசு கொடுத்த நிதியை பஞ்சாப்பில் ஆட்சி...மேலும்...
0 Comments , 100 Hits
01 January 2012, 18.43 செய்திகள்
பொற்கோயிலில் பிரதமர் வழிபாடு: கறுப்பு கொடி காண்பித்து ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில்...மேலும்...
0 Comments , 276 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits