புதுதில்லி: பாக்கிஸ்தானுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய மனம் விட்டு பேசுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ராஜ்ஜிய சபாவில் கேள்வி நேரத்தில் இன்று (ஆகஸ்டு 5) இது பற்றி கிருஷ்ணா பேசுகையில், “இரு நாடுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைய இந்தியா தயாராக இருக்கிறது என்பதை பாக்கிஸ்தான் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், அதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்கிஸ்தான் நிறுத்திக் கொள்வது அவசியம்.
மும்பை தாக்குதலின் பின்னணியில் பாக்கிஸ்தானின் உளவுத்துறை இருந்ததாக, தீவிரவாதி ஹெட்லி வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் அடிப்படையிலேயே உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கருத்து தெரிவித்திருந்தார். அதில் தவறு ஏதும் இல்லை.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





