புதுதில்லி: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இன்று (பிப். 25) தில்லியில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
2008-ம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்திலும், தாஜ் நட்சத்திர விடுதியிலும் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் பலர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தடை பட்டது.
இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு பின்னர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியா - பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நிருபமா ராவ், இந்தப் பேச்சுவார்த்தை இரு நாடு உறவை பலப் படுத்தும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த பாக்கிஸ்தானை, இந்தியா வலியுறுத்தியதாக தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




