maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் சென்னை நீதிமன்றத்தில் தமிழில் வாதாடிய வழக்கறிஞர்

சென்னை நீதிமன்றத்தில் தமிழில் வாதாடிய வழக்கறிஞர்

E-mail Print
Share/Save/Bookmark

madras highcourtசென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் முறையாக தமிழில் வாதாடப் பட்டது.

உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் இந்த சமயத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர்கள் இதை வலியுறுத்தி முதலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். பல நாடுகளில் இருந்து பல்வேறு தமிழ் அறிஞர்கள் கோவை மாநாட்டுக்கு வரும் போது, இது என்னடா புது பிரச்னை என தமிழக அரசும் திகைத்தது.

இதற்கிடையே, நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவதில் ஆட்சேபணை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் நேற்று (ஜூன் 21) கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (ஜூன் 22) திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வாங்கிய பட்டம் செல்லாது என்ற தமிழக அரசின் உத்தரவு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், தன் வாதங்களை தமிழில் எடுத்து வைத்தார். அவரது வாதங்களை, தலைமை நீதிபதி இக்பாலுக்கு, நீதிபதி முருகேசன் மொழிபெயர்த்தார்.அவசர வழக்காக இதை ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ரமேஷ் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இந்த வாரமே நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் வாதாடியது குறித்து வழக்கறிஞர் ரமேஷ் கூறுகையில், “தமிழில் வாதாதிடியதால் என் கட்சிக் காரர்கள் பக்க நியாத்தை எளிதில் எடுத்துரைக்க முடிந்தது. தமிழில் வாதாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 22 June 2010 19:08 )  


More and More


கிட்டதட்ட

13 April 2012, 17.21 தலைப்புச் செய்திகள்
தமிழ் புத்தாண்டை மாற்றுவதா ? - கருணாநிதி மீது ஜெ. பாய்ச்சல்
சென்னை: தன் சுயவிளம்பரத்திற்காக தமிழ் புத்தாண்டை தை முதல் நாளுக்கு...மேலும்...
0 Comments , 107 Hits
05 January 2012, 20.41 தலைப்புச் செய்திகள்
சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு முயற்சி : பிரதமர் உறுதி
புதுதில்லி: சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அனைத்து...மேலும்...
0 Comments , 120 Hits
23 January 2012, 17.50 தலைப்புச் செய்திகள்
மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மக்கள்நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்து தமிழக அரசு...மேலும்...
0 Comments , 111 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits