புதுதில்லி: ஜி - 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் நாளை (ஜூன் 25) கனடா புறப்படுகிறார். கனடா செல்லும் அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.
ஜி - 20 நாடுகளின் மாநாடு ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் கனடா தலைநகர் டொராண்டோவில் நடைபெறவுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப் படவுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கி வங்கிகள் தவிக்கும் போது அவற்றை மீட்பதற்காக உருவாக்கப் படும் நிதிக்காக, வங்கிகளுக்கு வரி விதிப்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப் படவுள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நாளை (ஜூன் 25) கனடா புறப்படுகிறார். இந்த மாநாட்டில், வங்கிகளுக்கு வரி விதிக்கும் திட்டத்தை இந்தியா எதிர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சர்வதேச பொருளாதார தேக்க நிலை ஏற்பட்ட போது இந்திய வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





