maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் அஃப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை

அஃப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க மத்திய அரசு பரிந்துரை

E-mail Print
Share/Save/Bookmark

afzal guruபுதுதில்லி: பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய தீவிரவாதி அஃப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க கோரி குடியரசு தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

9 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்ற கட்டிடம் தீவிரவாதிகளால் தாக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஃப்சல் குரு கைது செய்யப் பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. இந்த தண்டனை அளிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆகியும் தண்டனை இன்னும் நிறைவேற்றப் படாமல் உள்ளது. இதற்கிடையே, அஃப்சல் குருவின் தண்டனையைக் குறைக்க கோரி, அஃப்சல் குருவின் மனைவி தபசும் குடியரசு தலைவரிடம் கருணை மனு ஒன்றையும், 4 ஆண்டுகளுக்கு முன் அளித்திருந்தார். இதன் மீதும் முடிவு எதுவும் எடுக்கப் படாமல் காலம் தாழ்த்தப் பட்டு வருகிறது.

இந்நிலையில், அஃப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவரிடம் பரிந்துரைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான கோப்பை, உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுலலகத்துக்கு அனுப்பும். அங்கிருந்து, ராஷ்டிரபதி பவன் அனுப்பப் படும் என தெரிகிறது.

மத்திய அரசின் பரிந்துரை கடிதம் இன்னும் குடியரசு தலைவரிடம் வரவில்லை என ராஷ்டிரபதி பவன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 February 2012, 15.16 செய்திகள்
தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டார் சல்மான் குர்ஷித்
புதுதில்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்ட...மேலும்...
0 Comments , 228 Hits
04 January 2012, 18.29 தலைப்புச் செய்திகள்
இடஒதுக்கீடு : மத்திய அரசு திடீர் முடிவு
புதுதில்லி: மத்திய அரசு பணிகளில் நிரப்பப் படாமல் இருக்கும்...மேலும்...
0 Comments , 126 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits