மும்பை: உலக சாதனை செய்த சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா தர வேண்டி யாரும் பரிந்துரைக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவரே ஒரு பாரத ரத்னாதான் என்று சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே புகழ்ந்துத் தள்ளியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்தார். அதைப் பாராட்டி பால்தாக்கரே சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் மராத்திய மன்னர் வீரசிவாஜியுடன் டெண்டுல்கரை ஒப்பிட்டுள்ளார். சிவாஜி போர்களத்தில் எதிரிகளை வீழ்த்தினார். சச்சின் தெண்டுல்கர் ஆடுகளத்தில் எதிரணியின் பந்துகளை விளாசுகிறார் என கூறியிருக்கிறார். மேலும் சிவாஜி வாளை சுழற்றியதுப் போல சச்சின் கிரிக்கெட் பேட்டை (bat) சுழற்றுவதாகவும் வர்ணித்துள்ளார். இதுப் போன்ற சாதனைகளைப் படைக்க மகாராஷ்டிரர்களாலேயே முடியும் என்று முத்தாய்ப்பாக கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





