maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா பேசியதில் தவறு இல்லை - அன்புமணி

விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா பேசியதில் தவறு இல்லை - அன்புமணி

E-mail Print
Share/Save/Bookmark

anbumaniகோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியதில் எந்த தவறும் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அன்புமணி நேற்று (பிப்.2) கோவை வந்திருந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
'கடந்த 7 மாதங்களாக எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் சிறப்பான முறையில் செயல்படவில்லை. சட்டப்பேரவைக்கு வெளியிலும் எந்த ஒரு மக்கள் நல பிரச்னையிலும் அவர் ஈடுபடவில்லை. தேமுதிகவுக்கு என்று ஒரு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. சட்டப் பேரவையில் விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா பேசியது சரிதான்.

தேமுதிகவும் திராவிட கட்சிதான். அந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்.

தமிழகத்தின் கடன் தற்போது ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 70 சதவீதம் இலவசங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலவசமாகக் கொடுக்க வேண்டியது கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைப் பொருள்கள். ஆனால் 45 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் சாராயம், சினிமா, இலவசப் பொருள்கள் ஆகியவற்றைத்தான் கொண்டு வந்துள்ளனர்.'

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

30 January 2012, 20.08 செய்திகள்
ஆளுநர் புதுசு; உரை பழசு : விஜயகாந்த்
சென்னை: ஆளுநர் புதியவராக இருந்தாலும், அவரது உரை பழையதே என தேமுதிக...மேலும்...
0 Comments , 109 Hits
01 April 2012, 09.55 செய்திகள்
பட்ட காலில் படும் : மின் கட்டண உயர்வு குறித்து விஜயகாந்த் கருத்து
சென்னை: பட்ட காலில் படும் என்பது போல ஏற்கனவே விலைவாசி உயர்வினால்...மேலும்...
0 Comments , 54 Hits
21 March 2012, 18.24 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை - நடிகர் விஜயகாந்த்
சென்னை : சங்கரன்கோவில் இடைத்தேர்தலை தான் பெரிதாக எடுத்துக்...மேலும்...
0 Comments , 60 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits