பாட்னா: இந்தியா முழுவதும் இந்தியர்களுக்கே சொந்தம் என்று கூறி மும்பை மராட்டியர்களுக்கே சொந்தம் என்று கூறி அராஜகங்களில் ஈடுபட்டு வரும் சிவசேனாவிற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் நேற்று(01/02/2010) இரவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி மும்பை மராட்டியர்களுக்கே சொந்தம் என்று கூறி வரும் சிவசேனாவிற்கு பதிலடிக் கொடுத்துப் பேசினார்.
மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தப்போது பீகார், உத்தரப்பிரதேசம், மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த தேசியப் பாதுகாப்பு படையினர், மராட்டியப் படையினருடன் சேர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்பட்டனர். இப்பொழுது மும்பை மராட்டியர்களுக்கே சொந்தம் எனக் கூறும் சிவசேனாவினர் அப்பொழுது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இந்தியாவின் எந்த பகுதியையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்திய நாடு முழுவதும் இந்தியர்கள் அனைவருக்கும் உரித்தானது. இந்த விஷயத்தில் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரேவின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



