maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம்: ஆந்திர அரசின் மனு மார்ச் 22ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம்: ஆந்திர அரசின் மனு மார்ச் 22ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

E-mail Print
Share/Save/Bookmark

reservationபுதுதில்லி:  முஸ்லிம் மாணவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்திற்கு தடை விதித்து வழங்கப் பட்ட, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஆந்திர அரசின் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீடு மனுவை மார்ச் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

ஆந்திராவில் முஸ்லிம் மாணவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஆந்திர அரசு சட்டம் பிறப்பித்திருந்தது. இந்த சட்டம் செல்லாது என்று, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் 7 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஆந்திர மாநிலத்தில் இடஒதுக்கீடு மூலம் படித்து வரும் முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்கியது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஆந்திர அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

ஆந்திர அரசின் வழக்கறிஞர் வகன்வதி, இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கை மார்ச் 22ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

17 January 2012, 19.59 தலைப்புச் செய்திகள்
ஆந்திராவில் கடும் குளிர் : 15 பேர் பலி
ஐதரபாத்: ஆந்திராவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த...மேலும்...
0 Comments , 128 Hits
14 February 2012, 15.16 செய்திகள்
தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டார் சல்மான் குர்ஷித்
புதுதில்லி: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் மேற்கொண்ட...மேலும்...
0 Comments , 228 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits