புதுதில்லி: முஸ்லிம் மாணவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்திற்கு தடை விதித்து வழங்கப் பட்ட, ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஆந்திர அரசின் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீடு மனுவை மார்ச் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
ஆந்திராவில் முஸ்லிம் மாணவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஆந்திர அரசு சட்டம் பிறப்பித்திருந்தது. இந்த சட்டம் செல்லாது என்று, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் 7 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஆந்திர மாநிலத்தில் இடஒதுக்கீடு மூலம் படித்து வரும் முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்கியது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஆந்திர அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
ஆந்திர அரசின் வழக்கறிஞர் வகன்வதி, இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த வழக்கை மார்ச் 22ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





