புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வருகிற 17ம் தேதி நடைப்பெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (02/09/2010) கடைசி நாள். ஆனால் சோனியாவை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் தொடர்ந்து நான்காவது முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக போட்டியின்றி சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சோனியா காந்தியை ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மத்திய மந்திரிகள், ஷீலா தீட்சித், அசோக் கெலாட் போன்ற காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்மொழிந்து உள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இந்திராகாந்தி குடும்பத்தை தவிர்த்து வேறு யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் பதவி வேண்டாம் என சோனியா தியாகம் செய்தது போலவே, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியையும் விட்டுத்தர வேண்டும் என பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



