சென்னை: ஜூலை 5ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்தின் போது கடைகளை மூட வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என சென்னை மாநநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜூலை 5ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தின் போது காவல் துறை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
அன்றைய தினம் காலையில் பஸ் டிப்போக்களிலிருந்து பஸ்களை எடுக்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதை எதிர்கொள்ளும் வகையில் பஸ் டிப்போக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.பஸ்கள் இயக்கப்படுவதை யாராவது தடுக்க முயன்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது வேலை நிறுத்தத்தின் போது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடச் சொல்லி யாராவது நிர்ப்பந்தப்படுத்தினாலோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





