மும்பை: மும்பை நகரம் இந்தியர்களுக்கு சொந்தமாக இருக்கலாம். இத்தாலியர்களுக்கு சொந்தமாக இருக்க முடியாது என பால்தாக்ரே கருத்து தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் மராத்தி கோஷத்தைக் கண்டித்து ராகுல் காந்தி அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், மும்பை நகரம் அனைவருக்கும் சொந்தம் என கூறியிருந்தார். இது சிவசேனா கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியை திட்டி பால் தாக்ரே நாளொரு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இது குறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா'வில் பால்தாக்ரே எழுதியிருக்கும் தலையங்கத்தில், 'மும்பை இந்தியர்களுக்கு சொந்தமாக இருக்கலாம். இத்தாலியர்களுக்கு அல்ல.
காங்கிரசின் இளவரசர் ராகுல் காந்திக்கு அரசியலில் விரக்தி வந்து விட்டது. விரக்தியின் எதிரொலியாக மராத்தியர்களுக்கு எதிராக பேசி வருகிறார்.
அனைவரும் வந்து இஷ்டம் போல் தங்கி உமிழ்ந்து விட்டு செல்வதற்கு மும்பை ஒன்றும் சத்திரம் அல்ல.” என எழுதியுள்ளார்.
ராகுல் காந்தி இத்தாலிய தாய்க்கு பிறந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





பால் தாக்கரேப் பேசியுள்ள விதம் சரியில்லை. :( தான் அராஜகம் செய்துக்கொண்டு இருக்கும் போது அதை யாரேனும் தட்டிக் கேட்டால் பதிலுக்கு ’நீ ரொம்ப ஒழுங்கா...’ என்று தேவையில்லாத விஷயத்தையெல்லாம் பேசி வம்பிக்கிழுக்கும் லோக்கல் ரவுடிப் போலப் பேசுகிறார்.
இந்து முறையிலேயே ஒரு பெண் திருமணத்திற்கு பின் கணவன் எந்த மதமோ அந்த மதத்தை சார்ந்தவள் ஆகிவிடுகிறாள். குழந்தைகளும் தந்தையின் மரபில்தான் வருகின்றனர். சோனியாவிற்கு தாய் வீடு இத்தாலியாக இருந்தாலும் அவர் இந்திய மருமகள். ராகுலின் தந்தை ராஜீவ் இந்தியர்தானே? பெருமைமிக்க நேரு குடும்பத்தை சேர்ந்தவர்தானே?
இதுப் போல தேவையில்லாத சமயத்தில் அநாவசியமாகப் பேசி பிரச்சினையை திசைத் திருப்பப் பார்க்கிறார். இதுப் போன்ற பேச்சு அவரது மதிப்பைக் குறைத்து அவரது எதிராளிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.