புதுடெல்லி: மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் மகளிர் மசோதா இன்று (08/03/2010) ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 13 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதற்கு இடமளிக்கும் மகளிர் மசோதா இன்று (08/03/2010) ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கு பாஜகவும் ஆதரவு அளித்து வருகிறது. மேலும் திமுக, அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 13 வருட இந்த கனவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




