புதுதில்லி: மகளிருக்கு, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பலத்த சர்ச்சைக்கு நடுவே, மக்களவையில் இன்று (மார்ச் 9) நிறைவேறியது.
மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு பல ஆண்டுகளாக முயன்று வந்தது.
ஆனால் அரசியல் கட்சிகள் நடுவே நிலவிய கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில், இந்த மசோதாவை தாக்கல் செய்ய உலக மகளிர் தினமான நேற்று (மார்ச் 8) மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இன்று(மார்ச் 9) இந்த மசோதா ராஜ்ஜியசபாவில் நிறைவேறியது. அதற்கான வாக்கெடுப்பில், 186 பேர் இடஒதுக்கீடுக்கு ஆதரவாகவும், ஒருவர் எதிராகவும் வாக்களித்தனர்.
சோனியா மகிழ்ச்சி:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப் பட்டதில் தான் மிக மகிழ்ச்சி அடைவதாக காங். தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விஷப்பரீட்சை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




